Tuesday, June 12, 2007

யோகமும் அதன் மருத்துவ விளக்கமும்-ஓர் விஞ்ஞான பார்வை


ஓரு யோகி உயிர், மனம், உடல் இவை மூன்றையும் இசைவாக(Hormonius) வேறுபாடின்றி வைத்திருப்பதால் அங்கு தூண்டுதல் (stimulation), துலங்குதல் (Inhibition) என்ற இயல்பற்ற (abnormal) எதிர்செயல்-விளைவுகள் (negative feedback mechanism) நிகழ்வதில்லை.



அவர்களுடைய உடற்செல்களின் வளர்சிதை( Metobolism) மாற்றம் சமச்சீரானது, இயல்பானது ஒழுங்கானது, அதில் ஏற்றத்தாழ்வுகள் என்ற மிகுதல், குறைதல் இன்றி ஒத்த, பொருந்திய நிலையில் வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன.



இங்கு உயிர் என்றால் அது விஞ்ஞானத்தில் இல்லாத ஒன்று என்று இன்றைய நிலையில் உள்ள அறிவியல் தெளிகிறது, இருந்த போதிலும் சிலர் அதை செல்லின் ஊடே உள்ள (ectoplasm) எக்டோபிளாசம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.



எது எப்படியாயினும் உண்மை உண்மையாகவே இருக்கட்டும், காலம் கனியும் போது அவர்களின் அறிவுக்கு விடை கிடைக்கும்.

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று."- வள்ளுவர்.

இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞானியின் வேத வாக்கு.

ஆனால் இதை கற்போரின் அறிவுநிலைக்கு கிட்டுவதில்லை.
ஆக உடற்செல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு செயலாற்றும்போது அதன் வளர் (anabolism) , சிதை (catabolism) மாற்றங்களில் (metabolic reactions) , மிகுதல், குறைதல் ஏற்பட்டு அதீத வேதியல் மாற்றங்கள் (chemical imbalnces) நிகழ்கிறது. இவைகளே நோய் செய்யும் வாதம், பித்தம், சிலேத்துமம் என சித்தர்கள் கண்டு தெளிந்தனர்.


1.வாதம்(neurological imbalances)

2.பித்தம் (gastroentrological imbalances)

3.சிலேத்துமம்(Hormonal imbalances)

என்ற மூன்று அளவீடுகளுக்குள் சுருங்கச்சொன்னார்கள்.

ஆகவே நோய் என்பது சமச்சீரற்ற வளர்ச்சிதை (Metabolic disturbances)
மாற்றாத்தால் தோன்றுகிறது.

இந்த இயக்கம் அல்லது உந்துதலில் ஏற்படும் குறைகள், நோய்களை
சரி செய்யவே (மறு+உந்து= மருந்து) மருந்து கொடுத்து சமன் செய்யப்படுகிறது.

நோய் வந்தபின் மருந்து உட்கொண்டு சீர்செய்வதை விட , அன்றன்று
உடலில் ஏற்படும் உடற்செயல் மாற்றங்களை யோகப்பயிற்சியினால்
நெறிபடுத்துவதே யோகியின் நீள் ஆயுள், இறவாமை, மகிழ்ச்சியின் ரகசியங்கள்.

உடற்பயிற்சினால் உடலில் ஆரோக்கியமும், மனப்பயிற்சியால் மனதில் ஒரு தெளிவும் பெற்று என்றுமே ஒரு புத்துணர்வுடன் வாழ்க்கை ஒரு ஆத்மீக விளக்கமாக சுடர்விடும்.

இதற்கெல்லாம் உதாரண புருசர் எனது ஆசான் ஸ்ரீ வேதாத்திரி மகரிஷியே ஆவார், 95 ஆண்டுகள் நீண்டஆயுள் பெற்று வாழ்ந்து காட்டி, நிறைவுடன் சமாதி எய்தி, அவர் வாழ்ந்து காட்டிய வழியே இன்று எங்களுக்கு பாடமாக அமைந்து விட்டது.

எனவே சுவரை வைத்தே சித்திரம் வரைய முடியும்.
உடலும், உயிரும் உறுதியாக இருந்தால்தான் உண்மையை , மெய்ப்பொருளை தேடி தவம் செய்து பயணிக்கலாம்.
அந்த நிலை, ஆதி நிலை சமாதி (சமம்+ஆதி)நிலை காணும்வரை தொண்டாற்றி இன்பம் காண்போம்!

வாரீர்! வாரீர்! வாழ்க வளமுடன்.

http://www.vethathiri.org/











No comments: