Sunday, October 7, 2007

ஞானம் ஏன் வந்ததது?

தேடுதலின் துவக்கம்
வெறுமையின் வெளிப்பாடு
ஞானத்தின் ஏற்பாடு
குருவின் வருகை
தியானத்தின் பிரவேசம்
எண்ணத்தின் கழிவு

மொழியின் நிசப்தம்
மௌனத்தின் தெளிவு
புரிதலின் பரிமாணம்
தெரிதலின் தெளிவு
பொய்மையின் விடுதலை
மெய்மையின் ஈர்ப்பு

அச்சத்தின் உச்சம்
மரணத்தை எதிர்கொள்ளல்
யோகத்தின் கூடல்
மாயையை உணர்தல்
அகந்தையின் அழிவு
கன்மத்தின் களைவு
மும்மலம் மறைவு

முழுமையின் நோக்கம்
பிரம்மத்தில் இணைதல்
நிறைவின் பரவசம்
நிம்மதியின் முடிவு

சலனத்தின் தொடர்ச்சி
பிறப்பின் ஆரம்பம்
புலன்களின் சுகிப்பு
துன்பத்தின் எல்லை

அறிவின் தொலைவு
மனதின் ஆழம்
மறைவின் அறியாமை
இருளின் ஆதிக்கம்

சுயத்தின் ஆளுமை
பொருளின் நிறைவு
உறவின் நிலையாமை
துறவின் அடையாளம்

பரத்தின் புரிதல்
இருளின் அழிவு
வாழ்வின் தோல்வி
காலத்தின் நீட்சி

காதலின் ஈர்ப்பு
காமத்தின் கூடல்
கற்பின் நிச்சயம்
ஒழுக்கத்தின் பரிச்சயம்

புணர்தலின் உச்சம்
போகத்தின் நிறைவு
இன்பத்தின் தெரிவு
அமைதியின் நிறைவு

அகத்தின் தெளிவு
ஆன்மாவின் விடியல்
அன்பின் ஆனந்தம்
ஆசையின் நிறைவு

வாழ்வின் நோக்கம்
வேண்டுதல் வேண்டாமை
மரணத்தில் இறவாமை
அறவழி மறவாமை

இமைப்பொழுதும் நினைவு
இறைநிலையில் விலகாமை
சிந்தையிலே தெளிவு
சீர்பெறும் நம் வாழ்வு......


Saturday, October 6, 2007

மரணமிலாப்பெருவாழ்வு


சுவாசமும் மூச்சும் செய்வதேனோ!

இடமும் வலமும் இயங்குவதேனோ!

இன்பமும் துன்பமும் உணர்வதேனோ!

ஈர்ப்பும் இழப்பும் இருப்பதேனோ!


ஊழும் வினையும் சேர்ந்ததேனோ!

உடலும் உள்ளமும் சோர்வதேனோ!

நோயும் துன்பமும் வறுத்துவதேனோ!

நிழலில் நிஜமும் மறைவதேனோ!


கடனும் வறுமையும் வந்ததேனோ!

கண்ணீரும் கவலையும் தந்ததேனோ!

பொய்யும் புழுகும் சொல்வதேனோ!

கொலையும் கேடும் நடப்பதேனோ!


மனமும் குணமும் மாறுவதேனோ!

களவும் காமமும் ருசிப்பதேனோ!

பசியும் பயமும் பிறப்பதேனோ!

பிணியும் நோவும் கொள்வதேனோ!

மெய்யுக்குள்ளே மெய்யாக சேர

மேனியொரு துன்பம் மெய்யாக...

பொய்யுக்குள்ளே பொய்யாக வாழ

போடுகிற வேடந்தான் பொய்யாக...


நான் நீ என்னும் அகந்தை

உயிர் போகும் வரை

உடல் வேகும் வரை

உடல் சாகும் முன்னே

உயிர் போகும் முன்னே

மெய்யது உணர்வோம்!

மெய்யது உணர்வோம்!

Tuesday, August 21, 2007

ஞானம் எனபது.....


விதியால் வீழ்வது மூடம்
மதியால் வெல்வது ஞானம்
பொய்மையில் வாழ்வது அவலம்
வெறுமையில் திளைப்பது யோகம்
வெளியில் உணர்வது சூன்யம்
உண்மையில் உறைவது ஞானம்
தெளிவினில் திகழ்வது மௌனம்
பொறுமையில் பெறுவது விவேகம்
நன்மையில் நடப்பது பெருமிதம்
தீமையில் தொடர்வது துன்பம்
கடமையை செய்வது கர்மம்
கண்ணில் உள்ளது கரணம்
கற்பில் சரிவது சலனம்
கருத்தில் நிற்பது கவனம்
வினையை களைவது யோகம்
ஊழில் வீழ்வது ரோகம்
பெண்ணில் இணைவது மோகம்
பெண்ணுள் உறைவது காமம்
வெற்றியில் களிப்பது கர்வம்
மதியில் பிறழ்வது சபலம்
உயிரை உணர்வது யோகம்
உணர்வில் வாழ்வது ஞானம்
வாழ்வில் தோற்பது மரணம்
கதியில் சேர்வது சமனம்
முதுமையில் அழிவது தேகம்
கடைசியில் வெல்வது காலம்
காலத்தில் உள்ளது ஞாலம்
கருத்தில் கொள்வது ஞானம்


Friday, August 17, 2007

மதியும்-திதியும்


மதியது வளர்பிறை மனமது திளைக்கும்

உயிரது பெருகும் உடலது சுகிக்கும்

புலனது உணரும் புருவமத்தி துடிக்கும்

தினமது நடக்கும் முழுமதியில் முற்றும்

திதியது தேய்பிறை திரைகடல் குறுகும்

உயிரது வற்றும் நோயது தோன்றும்

புலனது அடங்கும் புரிதல் தொடங்கும்

செயலது வேண்டாம் செய்தால் மங்கும்

கருமதி தொடக்கம் நிறைமதி முடிவும்

மனமது இயங்கும் மதியது பொங்கும்

குறைமதி தவிர்த்தும் வளர்மதி சேர்த்தும்

உயிரது உணர்வோம் மெய்யது காண்போம்.