Monday, June 11, 2007

யோகமும் நவீன மருத்துவம்-ஓர் விளக்கம்





யோகம் செய்து உடலையும், மனதையும் நெறிபடுத்துவன் யோகி அல்லது சித்தன் எனப்படுவான்.

இந்த யோகிகள், சித்தர்கள் எவ்வாறு தங்களை நோயின்றியும் , முதுமையின்றியும் நீண்ட ஆயுளோடு வாழமுடிந்தது என்பது இன்றைய நவீன அறிவியலுக்கு புரியாத புதிராக உள்ளது.


உயிரையும், உண்மையையும் உணராத விஞ்ஞானம் என்றுமே மெய்ஞானத்தோடு தோற்றுப்போகிறது.

" உடம்பை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே!"ଭଭ- என்பது திருமூலர் வாக்கு.

எனவே உடல் என்பது உயிரை சுமக்கும் ஓரு கருவியாகும்.

உடலை நெறிபடுத்தினால் உயிரும் நிலைக்கும் ,ஆயுளும் நீளும் என தீர்க்கமாக சித்தர்கள் தெளிந்து கண்டார்கள். அதன் விளைவாக ஆராய்ந்து கண்டதே யோகமும், யோகாசனம் என்கிற உடற்பயிற்சி முறைகளாகும்.

மேலும் சூழ்நிலை,விதிவசத்தின் காரணமாக உடல் நோயுற்றால் அதை குணபடுத்த அவர்கள் செய்த இயற்கைமருத்துவமே ஆயுர்வேதமும், சித்தமருத்துவமாகும்.

சித்தர்களின் வாழ்க்கை முறை மூன்று நோக்கங்களை அடிப்படையாக கொண்டது

1. மகிழ்போகம்

2.ஈதல்

3. இறவாமை


இவ்வாறே அவர்கள் வாழ்ந்து பயின்ற யோகக்கலையை மேலும் வேண்டுவோருக்கு பயிற்றுவித்தார்கள்.

அவற்றின் எச்சங்களே இன்று நாம் காணும் யோகமுறைகளாகும்.

மருத்துவ அறிவியல் மேன்மை பொருந்தியதும், மதிக்கதக்கதும் கூடியதாகும்,ஆனால் அதன் பயனாக சிகிச்சை முறைகளும், நோய்களும் கூடியுள்ளது என்பதே மறுக்கமுடியாத அனுபவ உண்மையாகும்.

நோயின்றி வாழ வழியறியாத நவீன மருத்துவம் என்றுமே முழுமையாகது. ஆகவேதான் மேலைநாட்டினர் விடைதெரியாத மனநோய்களையும்,உடல்நோய்களையும் ஆராய்ந்து தீர்க்க வழியில்லாமல் யோகத்தின் உண்மையை உணர்ந்து, யோகத்தை நம்மிலும் மேலாக பயின்று பயனடைந்து , மற்றவர்களுக்கு பயிற்றுவித்தும் வருகிறார்கள்.

வாழ்க்கையை வாழக்கற்று கொடுக்கும் யோகிகளுக்கு நாம் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளோம்.

வாழ்வாங்கு வாழ வாழ்க வளமுடன் என வாழ்த்துவோம்.
வாரீர்! வாரீர்!.... www.vethathiri.org

தொடரும்....

No comments: