
யோகம் செய்து உடலையும், மனதையும் நெறிபடுத்துவன் யோகி அல்லது சித்தன் எனப்படுவான்.
வாழ்க்கையை வாழக்கற்று கொடுக்கும் யோகிகளுக்கு நாம் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளோம்.
விடியல் எனும் விளக்கை ஏற்றிடவே!
விழித்தெழுந்தேன் நீ என்னுள் வரவே!
வீணே தேகம் எனும் விவேகம் கண்டே! விதி
வெல்லும் வ்ழி அறியேன் மதியே!
துயில் மறந்து துயிலும் கலையை தருவே!
துணை மறந்து உனை நினையும் அறிவே!
விண்ணும் மண்ணும் யாவும் எதுவே!
கண்ணும் கருத்தும் காண குருவே!
எண்ணும் எழுத்தும் இனி அதுவே!
திண்ணும் உயிரை கொல்லும் மாயே!
பொன்னும் பொருளும் வேண்டா அறவே!
பெண்ணும் பேய்க்காமம் இனி நன்றே!
கனலே! குண்டலினி கனலே! எழுவே!
அனலே! என்னுள் எழுவே! எழுவே!
விடியலே! இனி விடியலே!
வினைதீரும்வரை......
நந்தா விளக்கே! எனை விளக்கு....
மெய்யுடன் ... யோகபாரதி.
எதுவரை நீ அதுவரை நான்...
இதுவரை நான் இனிஎதுவும் நீ...
கல்லாதவரை நீ கற்றவரை நான்...
தேடும்வரை நான் தெரியும்வரை நீ...
சுடும்வரை நீ சுவாசம்வரை நான்...
உடல்வரை நான் உயிர்வரை நீ...
கற்புவரை நீ களவுவரை நான்...
மடியும்வரை நான் முடியும்வரை நீ...
மறுபடியும் நீ மரிக்கும்வரை நான்...
முற்றும்வரை நான் மூலம்வரை நீ...
விடியல்வரை நீ வினைவரை நான்... இனி
எதுவரை நான் அதுவரை நீ
இதுவரை நீ இனிஏது நான்....
எழுதியவர்:<$BlogItemAuthorNickname$> @ <$BlogItemDateTime$>
At <$BlogCommentDateTime$>, <$BlogCommentAuthor$> said…
<$BlogCommentBody$>
<$BlogCommentDeleteIcon$><$BlogItemCreate$>
<$BlogItemBacklinkCreate$>
No comments:
Post a Comment