Friday, August 17, 2007

மதியும்-திதியும்


மதியது வளர்பிறை மனமது திளைக்கும்

உயிரது பெருகும் உடலது சுகிக்கும்

புலனது உணரும் புருவமத்தி துடிக்கும்

தினமது நடக்கும் முழுமதியில் முற்றும்

திதியது தேய்பிறை திரைகடல் குறுகும்

உயிரது வற்றும் நோயது தோன்றும்

புலனது அடங்கும் புரிதல் தொடங்கும்

செயலது வேண்டாம் செய்தால் மங்கும்

கருமதி தொடக்கம் நிறைமதி முடிவும்

மனமது இயங்கும் மதியது பொங்கும்

குறைமதி தவிர்த்தும் வளர்மதி சேர்த்தும்

உயிரது உணர்வோம் மெய்யது காண்போம்.

No comments: