Tuesday, August 21, 2007

ஞானம் எனபது.....


விதியால் வீழ்வது மூடம்
மதியால் வெல்வது ஞானம்
பொய்மையில் வாழ்வது அவலம்
வெறுமையில் திளைப்பது யோகம்
வெளியில் உணர்வது சூன்யம்
உண்மையில் உறைவது ஞானம்
தெளிவினில் திகழ்வது மௌனம்
பொறுமையில் பெறுவது விவேகம்
நன்மையில் நடப்பது பெருமிதம்
தீமையில் தொடர்வது துன்பம்
கடமையை செய்வது கர்மம்
கண்ணில் உள்ளது கரணம்
கற்பில் சரிவது சலனம்
கருத்தில் நிற்பது கவனம்
வினையை களைவது யோகம்
ஊழில் வீழ்வது ரோகம்
பெண்ணில் இணைவது மோகம்
பெண்ணுள் உறைவது காமம்
வெற்றியில் களிப்பது கர்வம்
மதியில் பிறழ்வது சபலம்
உயிரை உணர்வது யோகம்
உணர்வில் வாழ்வது ஞானம்
வாழ்வில் தோற்பது மரணம்
கதியில் சேர்வது சமனம்
முதுமையில் அழிவது தேகம்
கடைசியில் வெல்வது காலம்
காலத்தில் உள்ளது ஞாலம்
கருத்தில் கொள்வது ஞானம்


No comments: