Sunday, October 7, 2007

ஞானம் ஏன் வந்ததது?

தேடுதலின் துவக்கம்
வெறுமையின் வெளிப்பாடு
ஞானத்தின் ஏற்பாடு
குருவின் வருகை
தியானத்தின் பிரவேசம்
எண்ணத்தின் கழிவு

மொழியின் நிசப்தம்
மௌனத்தின் தெளிவு
புரிதலின் பரிமாணம்
தெரிதலின் தெளிவு
பொய்மையின் விடுதலை
மெய்மையின் ஈர்ப்பு

அச்சத்தின் உச்சம்
மரணத்தை எதிர்கொள்ளல்
யோகத்தின் கூடல்
மாயையை உணர்தல்
அகந்தையின் அழிவு
கன்மத்தின் களைவு
மும்மலம் மறைவு

முழுமையின் நோக்கம்
பிரம்மத்தில் இணைதல்
நிறைவின் பரவசம்
நிம்மதியின் முடிவு

சலனத்தின் தொடர்ச்சி
பிறப்பின் ஆரம்பம்
புலன்களின் சுகிப்பு
துன்பத்தின் எல்லை

அறிவின் தொலைவு
மனதின் ஆழம்
மறைவின் அறியாமை
இருளின் ஆதிக்கம்

சுயத்தின் ஆளுமை
பொருளின் நிறைவு
உறவின் நிலையாமை
துறவின் அடையாளம்

பரத்தின் புரிதல்
இருளின் அழிவு
வாழ்வின் தோல்வி
காலத்தின் நீட்சி

காதலின் ஈர்ப்பு
காமத்தின் கூடல்
கற்பின் நிச்சயம்
ஒழுக்கத்தின் பரிச்சயம்

புணர்தலின் உச்சம்
போகத்தின் நிறைவு
இன்பத்தின் தெரிவு
அமைதியின் நிறைவு

அகத்தின் தெளிவு
ஆன்மாவின் விடியல்
அன்பின் ஆனந்தம்
ஆசையின் நிறைவு

வாழ்வின் நோக்கம்
வேண்டுதல் வேண்டாமை
மரணத்தில் இறவாமை
அறவழி மறவாமை

இமைப்பொழுதும் நினைவு
இறைநிலையில் விலகாமை
சிந்தையிலே தெளிவு
சீர்பெறும் நம் வாழ்வு......


Saturday, October 6, 2007

மரணமிலாப்பெருவாழ்வு


சுவாசமும் மூச்சும் செய்வதேனோ!

இடமும் வலமும் இயங்குவதேனோ!

இன்பமும் துன்பமும் உணர்வதேனோ!

ஈர்ப்பும் இழப்பும் இருப்பதேனோ!


ஊழும் வினையும் சேர்ந்ததேனோ!

உடலும் உள்ளமும் சோர்வதேனோ!

நோயும் துன்பமும் வறுத்துவதேனோ!

நிழலில் நிஜமும் மறைவதேனோ!


கடனும் வறுமையும் வந்ததேனோ!

கண்ணீரும் கவலையும் தந்ததேனோ!

பொய்யும் புழுகும் சொல்வதேனோ!

கொலையும் கேடும் நடப்பதேனோ!


மனமும் குணமும் மாறுவதேனோ!

களவும் காமமும் ருசிப்பதேனோ!

பசியும் பயமும் பிறப்பதேனோ!

பிணியும் நோவும் கொள்வதேனோ!

மெய்யுக்குள்ளே மெய்யாக சேர

மேனியொரு துன்பம் மெய்யாக...

பொய்யுக்குள்ளே பொய்யாக வாழ

போடுகிற வேடந்தான் பொய்யாக...


நான் நீ என்னும் அகந்தை

உயிர் போகும் வரை

உடல் வேகும் வரை

உடல் சாகும் முன்னே

உயிர் போகும் முன்னே

மெய்யது உணர்வோம்!

மெய்யது உணர்வோம்!