Sunday, October 7, 2007

ஞானம் ஏன் வந்ததது?

தேடுதலின் துவக்கம்
வெறுமையின் வெளிப்பாடு
ஞானத்தின் ஏற்பாடு
குருவின் வருகை
தியானத்தின் பிரவேசம்
எண்ணத்தின் கழிவு

மொழியின் நிசப்தம்
மௌனத்தின் தெளிவு
புரிதலின் பரிமாணம்
தெரிதலின் தெளிவு
பொய்மையின் விடுதலை
மெய்மையின் ஈர்ப்பு

அச்சத்தின் உச்சம்
மரணத்தை எதிர்கொள்ளல்
யோகத்தின் கூடல்
மாயையை உணர்தல்
அகந்தையின் அழிவு
கன்மத்தின் களைவு
மும்மலம் மறைவு

முழுமையின் நோக்கம்
பிரம்மத்தில் இணைதல்
நிறைவின் பரவசம்
நிம்மதியின் முடிவு

சலனத்தின் தொடர்ச்சி
பிறப்பின் ஆரம்பம்
புலன்களின் சுகிப்பு
துன்பத்தின் எல்லை

அறிவின் தொலைவு
மனதின் ஆழம்
மறைவின் அறியாமை
இருளின் ஆதிக்கம்

சுயத்தின் ஆளுமை
பொருளின் நிறைவு
உறவின் நிலையாமை
துறவின் அடையாளம்

பரத்தின் புரிதல்
இருளின் அழிவு
வாழ்வின் தோல்வி
காலத்தின் நீட்சி

காதலின் ஈர்ப்பு
காமத்தின் கூடல்
கற்பின் நிச்சயம்
ஒழுக்கத்தின் பரிச்சயம்

புணர்தலின் உச்சம்
போகத்தின் நிறைவு
இன்பத்தின் தெரிவு
அமைதியின் நிறைவு

அகத்தின் தெளிவு
ஆன்மாவின் விடியல்
அன்பின் ஆனந்தம்
ஆசையின் நிறைவு

வாழ்வின் நோக்கம்
வேண்டுதல் வேண்டாமை
மரணத்தில் இறவாமை
அறவழி மறவாமை

இமைப்பொழுதும் நினைவு
இறைநிலையில் விலகாமை
சிந்தையிலே தெளிவு
சீர்பெறும் நம் வாழ்வு......


2 comments:

Anonymous said...

Gostei muito desse post e seu blog é muito interessante, vou passar por aqui sempre =) Depois dá uma passada lá no meu site, que é sobre o CresceNet, espero que goste. O endereço dele é http://www.provedorcrescenet.com . Um abraço.

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the TV de LCD, I hope you enjoy. The address is http://tv-lcd.blogspot.com. A hug.