Saturday, October 6, 2007

மரணமிலாப்பெருவாழ்வு


சுவாசமும் மூச்சும் செய்வதேனோ!

இடமும் வலமும் இயங்குவதேனோ!

இன்பமும் துன்பமும் உணர்வதேனோ!

ஈர்ப்பும் இழப்பும் இருப்பதேனோ!


ஊழும் வினையும் சேர்ந்ததேனோ!

உடலும் உள்ளமும் சோர்வதேனோ!

நோயும் துன்பமும் வறுத்துவதேனோ!

நிழலில் நிஜமும் மறைவதேனோ!


கடனும் வறுமையும் வந்ததேனோ!

கண்ணீரும் கவலையும் தந்ததேனோ!

பொய்யும் புழுகும் சொல்வதேனோ!

கொலையும் கேடும் நடப்பதேனோ!


மனமும் குணமும் மாறுவதேனோ!

களவும் காமமும் ருசிப்பதேனோ!

பசியும் பயமும் பிறப்பதேனோ!

பிணியும் நோவும் கொள்வதேனோ!

மெய்யுக்குள்ளே மெய்யாக சேர

மேனியொரு துன்பம் மெய்யாக...

பொய்யுக்குள்ளே பொய்யாக வாழ

போடுகிற வேடந்தான் பொய்யாக...


நான் நீ என்னும் அகந்தை

உயிர் போகும் வரை

உடல் வேகும் வரை

உடல் சாகும் முன்னே

உயிர் போகும் முன்னே

மெய்யது உணர்வோம்!

மெய்யது உணர்வோம்!

No comments: