Thursday, May 24, 2007

நான் காணும் ஞான பாரதி....

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் திண்ணத் தகாதென்று

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

மிடிமையும் அச்சமும் மேவிய என்னெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

தன்செயல் எண்ணி தவிப்பது தீது இங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

துன்பமினியில்லை சோர்வில்லை தோற்ப்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

நல்லது தீயது நாமறிவோமே அன்னை
நல்லது நாட்டுக தீமை ஓட்டுக !

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!
---------------------------------------------------------

மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லெயினிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்.

நானும் நீயும்....மெய்புலம்பல்


மெய் மறந்தேனோ! மெய்யும் மறந்தேனோ!
பொய் உரைத்தேனே பொய்யும் உரைத்தேனோ!

உயிரும் உணர்வும் நீயென்று அறியாமல்
உரைத்தேனே பொய்மையுள் உறைந்தேனே!

நேர்மையும் நீதியும் நீயென்று நினையாமல்
நெறிபிறழ்ந்தேனோ! மெய்மறந்தேனோ!

மதியிழந்தேனோ! மதியிழந்தேனே!
மயக்கத்தில் மதிகெட்டேனே!

அறிந்தேனே! மெய் அறிவேனே!
அறிவறிந்தேனே! அகமறிந்தேனே!

நான் அறிவேனோ! நான் அறிந்தேனே!
நானே நீயென்று மெய்யும் அறிவேனோ....

விதியது ஊழ் வினையது
வினைவது விளைவது- இனி ஏது....

நின்னை சரணடைந்தேனே!
முன்னை வினை அறுப்பேனோ!

நிற்பதுவும் நடப்பதுவும்
நிகழ்ந்ததுவும் நிகழ்வதுவும்
நீயின்றி நானில்லை....
நான் அன்றி இங்கு ஏதும் உண்டோ?

மெய்மறவேனே! இனி மெய்மறவேனே......

Sunday, May 20, 2007

ஓசோவின் முத்துக்கள்-ஞானம் தேடுவோருக்கு வித்துக்கள்


"கடவுள் உன்னை ஒவ்வொரு கணமும் சோதிக்கிறார்
சிரித்துக்கொண்டே அதை ஏற்றுக்கொள்.
சோதிக்கத் தகுதியுள்ளவனாக உன்னை அவர்
தேர்ந்தெடுத்தது மிகவும் இனிமையானது." - ஓசோ

"உனக்கு நீயே விளக்கமாயிரு.தூண்டுதல் என்றால்
நீ யாரையோ பின்பற்றுகிறாய் என்று அர்த்தம்."- ஓசோ

"வாழ்வு ஓர் எல்லையில்லாத புதிர், ஆகவே அறிவு
மிகுந்தவர்கள் வாழமுடிவதில்லை! வாழ்வு குழந்தைத்தனம்
கொண்டோர்க்கே உரியதாக இருக்கிறது." - ஓசோ

"நீங்கள் எதன்மேல் பிடிப்பு வைத்திருந்தாலும், நீங்கள் அதனால்
ஆக்கிரமிக்கப்படுவீர்கள். அதை இழந்து விடுவோமோ
என்று பயப்படத் தொடங்குவீர்கள்." - ஓசோ

"புத்திசாலித்தன மற்றவன் எளிதில் புரிந்து கொள்ளப்படுகிறான். அவன்
இந்த சமுதாயத்திற்கு மிகவும் பொருந்திப் போகிறான். அவனை மதிப்பிட
மதிப்பீடுகளையும், குணங்களையும் சமுகம் வைத்திருக்கிறது.ஆனால்
ஓரு அறிவுஜீவியை மதிப்பிட சமூக்கத்திற்கு பல வருடங்களாகும்." - ஓசோ

Saturday, May 19, 2007

யோகம் என்பது-எனது பார்வையில்...


யோகம் ஒரு விஞ்ஞானமாகும், இதை நவீன உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்தும், பரவியும் வருகிறது.

நம்மில் பெரும்பாலோர் யோகம் அல்லது யோகா என்பதை உடற்பயிற்சி முறை என்று தவறான எண்ணம் கொண்டுள்ளோம் .

உண்மையில் யோகாசனம் என்பதே நீங்கள் காணும் ஆசனா அல்லது உடற்பயிற்சி முறையாகும். இவைகள் யோகத்தின் முதல்படியாகும், உடலை நெறிபடுத்தி ,நோயின்றி நீண்ட ஆயுள் பெற்று வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும்.

யோகம் என்ற வடமொழி சொல்லுக்கு-" இணைந்திருத்தல் அல்லது சேர்ந்திருத்த்ல்" என்று பொருள் படும், நமது செந்தமிழில் "தவம்" என்பதே சரியானதாகும்.

நாம் செய்யும் எந்த செயலிலும் ஒற்றை மனதுடன் வேறுபாடின்றி லயித்து செய்வதே யோகம் அல்லது தவமாகும்.

"தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு"

என சுருங்கச்சொல்லுகிறது தமிழ்மறை வள்ளுவம்.

தவம் செய்து வருவதால் மனமானது விழிப்படைந்து எதைச்செய்யினும் சரிவர செய்யும், மனதின் உற்றுநோக்கும் திறன் கூடி , ஞாபக சக்தியும் அதிகரிப்பது கண்டறிந்த உண்மையகும்.

யோகம் என்பது மனதை உயிரின் மேல் வைத்து கவனிப்பது அல்லது தியானிப்பது என்பது எளிமை பொருளாகும்.

ஒவ்வொரு மனிதருக்கும் தன்னுடைய வித்து அல்லது மூலாதாரம் அமைந்துள்ள குதத்தின் மேல் பகுதியில் குண்டலினி மகாசக்தி இயக்கதில் உள்ளது. இது அறிவின் தரத்திற்கு ஏற்ப மேலெழுச்சி பெற்று ஒளிரும்.

அட்டாங்க யோகமும் இதையே தெளிவு பட விளக்குகிறது.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை ஒவ்வொரு நிலையாக எட்டாவது நிலையான தலையின் உச்சியான பிரம்மரந்திரம் அல்லது

துரியத்தில் மேல் நோக்கி செலுத்துவதாகும். இதையே எட்டு சக்கரங்களாகவும் கொள்ளுவர்.

யோகத்தில் பல முறைகள் உள்ளது. இதை தகுந்த குருவின் துணையோடே கற்றுக்கொள்ள வேண்டும்.

எளியமுறை குண்டலினி யோகத்தை நீங்கள் ஐயமின்றி சுவாமி வேதாத்திரி அவர்களின் முறைப்படி உங்கள் அருகாமையிலுள்ள

மனவளக்கலை மன்றத்தில் பொருட்செலவும்,காலச்செலவின்றி

கற்று பயன் பெறலாம். இணைய முகவரி www.vethathiri.org ல் சென்று மேலும் தகவல்கள் பெறலாம்.



மேலும் வளரும்...

Thursday, May 17, 2007

மெய்யன்பர்களே-விழித்துக்கொள்ளுங்கள்!


வாழ்க்கை என்பது வெறும் கேளிக்கை மட்டுமா?
இன்பத்தில் பூரிக்கும் இந்த மனம்,
ஏன் துன்பத்தில் சிக்கித்தவிக்கும் போது நொந்து போகிறது, சிந்தியுங்கள்!
உடல்-உயிர்-மனம், என்றுமே இசைவாக வைக்க கற்றுக்கொள்ளுவோம், வாருங்கள் வரவேற்கிறோம் .
www.vethathiri.org வாழ்க வளமுடன்!