Thursday, May 24, 2007

நான் காணும் ஞான பாரதி....

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் திண்ணத் தகாதென்று

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

மிடிமையும் அச்சமும் மேவிய என்னெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

தன்செயல் எண்ணி தவிப்பது தீது இங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

துன்பமினியில்லை சோர்வில்லை தோற்ப்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

நல்லது தீயது நாமறிவோமே அன்னை
நல்லது நாட்டுக தீமை ஓட்டுக !

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!
---------------------------------------------------------

மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லெயினிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்.

No comments: