Thursday, May 24, 2007

நானும் நீயும்....மெய்புலம்பல்


மெய் மறந்தேனோ! மெய்யும் மறந்தேனோ!
பொய் உரைத்தேனே பொய்யும் உரைத்தேனோ!

உயிரும் உணர்வும் நீயென்று அறியாமல்
உரைத்தேனே பொய்மையுள் உறைந்தேனே!

நேர்மையும் நீதியும் நீயென்று நினையாமல்
நெறிபிறழ்ந்தேனோ! மெய்மறந்தேனோ!

மதியிழந்தேனோ! மதியிழந்தேனே!
மயக்கத்தில் மதிகெட்டேனே!

அறிந்தேனே! மெய் அறிவேனே!
அறிவறிந்தேனே! அகமறிந்தேனே!

நான் அறிவேனோ! நான் அறிந்தேனே!
நானே நீயென்று மெய்யும் அறிவேனோ....

விதியது ஊழ் வினையது
வினைவது விளைவது- இனி ஏது....

நின்னை சரணடைந்தேனே!
முன்னை வினை அறுப்பேனோ!

நிற்பதுவும் நடப்பதுவும்
நிகழ்ந்ததுவும் நிகழ்வதுவும்
நீயின்றி நானில்லை....
நான் அன்றி இங்கு ஏதும் உண்டோ?

மெய்மறவேனே! இனி மெய்மறவேனே......

No comments: