Saturday, May 19, 2007

யோகம் என்பது-எனது பார்வையில்...


யோகம் ஒரு விஞ்ஞானமாகும், இதை நவீன உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்தும், பரவியும் வருகிறது.

நம்மில் பெரும்பாலோர் யோகம் அல்லது யோகா என்பதை உடற்பயிற்சி முறை என்று தவறான எண்ணம் கொண்டுள்ளோம் .

உண்மையில் யோகாசனம் என்பதே நீங்கள் காணும் ஆசனா அல்லது உடற்பயிற்சி முறையாகும். இவைகள் யோகத்தின் முதல்படியாகும், உடலை நெறிபடுத்தி ,நோயின்றி நீண்ட ஆயுள் பெற்று வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும்.

யோகம் என்ற வடமொழி சொல்லுக்கு-" இணைந்திருத்தல் அல்லது சேர்ந்திருத்த்ல்" என்று பொருள் படும், நமது செந்தமிழில் "தவம்" என்பதே சரியானதாகும்.

நாம் செய்யும் எந்த செயலிலும் ஒற்றை மனதுடன் வேறுபாடின்றி லயித்து செய்வதே யோகம் அல்லது தவமாகும்.

"தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு"

என சுருங்கச்சொல்லுகிறது தமிழ்மறை வள்ளுவம்.

தவம் செய்து வருவதால் மனமானது விழிப்படைந்து எதைச்செய்யினும் சரிவர செய்யும், மனதின் உற்றுநோக்கும் திறன் கூடி , ஞாபக சக்தியும் அதிகரிப்பது கண்டறிந்த உண்மையகும்.

யோகம் என்பது மனதை உயிரின் மேல் வைத்து கவனிப்பது அல்லது தியானிப்பது என்பது எளிமை பொருளாகும்.

ஒவ்வொரு மனிதருக்கும் தன்னுடைய வித்து அல்லது மூலாதாரம் அமைந்துள்ள குதத்தின் மேல் பகுதியில் குண்டலினி மகாசக்தி இயக்கதில் உள்ளது. இது அறிவின் தரத்திற்கு ஏற்ப மேலெழுச்சி பெற்று ஒளிரும்.

அட்டாங்க யோகமும் இதையே தெளிவு பட விளக்குகிறது.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை ஒவ்வொரு நிலையாக எட்டாவது நிலையான தலையின் உச்சியான பிரம்மரந்திரம் அல்லது

துரியத்தில் மேல் நோக்கி செலுத்துவதாகும். இதையே எட்டு சக்கரங்களாகவும் கொள்ளுவர்.

யோகத்தில் பல முறைகள் உள்ளது. இதை தகுந்த குருவின் துணையோடே கற்றுக்கொள்ள வேண்டும்.

எளியமுறை குண்டலினி யோகத்தை நீங்கள் ஐயமின்றி சுவாமி வேதாத்திரி அவர்களின் முறைப்படி உங்கள் அருகாமையிலுள்ள

மனவளக்கலை மன்றத்தில் பொருட்செலவும்,காலச்செலவின்றி

கற்று பயன் பெறலாம். இணைய முகவரி www.vethathiri.org ல் சென்று மேலும் தகவல்கள் பெறலாம்.



மேலும் வளரும்...

1 comment:

வடுவூர் குமார் said...

மனவளக்கலை மன்றத்தில் பொருட்செலவும்,காலச்செலவின்றி கற்று பயன் பெறலாம்.
அப்படியா?
சிங்கையிலும் இருக்கிறது,முயற்சிக்கிறேன்.
சுட்டியை கொடுத்தற்கு நன்றி.