Sunday, May 20, 2007

ஓசோவின் முத்துக்கள்-ஞானம் தேடுவோருக்கு வித்துக்கள்


"கடவுள் உன்னை ஒவ்வொரு கணமும் சோதிக்கிறார்
சிரித்துக்கொண்டே அதை ஏற்றுக்கொள்.
சோதிக்கத் தகுதியுள்ளவனாக உன்னை அவர்
தேர்ந்தெடுத்தது மிகவும் இனிமையானது." - ஓசோ

"உனக்கு நீயே விளக்கமாயிரு.தூண்டுதல் என்றால்
நீ யாரையோ பின்பற்றுகிறாய் என்று அர்த்தம்."- ஓசோ

"வாழ்வு ஓர் எல்லையில்லாத புதிர், ஆகவே அறிவு
மிகுந்தவர்கள் வாழமுடிவதில்லை! வாழ்வு குழந்தைத்தனம்
கொண்டோர்க்கே உரியதாக இருக்கிறது." - ஓசோ

"நீங்கள் எதன்மேல் பிடிப்பு வைத்திருந்தாலும், நீங்கள் அதனால்
ஆக்கிரமிக்கப்படுவீர்கள். அதை இழந்து விடுவோமோ
என்று பயப்படத் தொடங்குவீர்கள்." - ஓசோ

"புத்திசாலித்தன மற்றவன் எளிதில் புரிந்து கொள்ளப்படுகிறான். அவன்
இந்த சமுதாயத்திற்கு மிகவும் பொருந்திப் போகிறான். அவனை மதிப்பிட
மதிப்பீடுகளையும், குணங்களையும் சமுகம் வைத்திருக்கிறது.ஆனால்
ஓரு அறிவுஜீவியை மதிப்பிட சமூக்கத்திற்கு பல வருடங்களாகும்." - ஓசோ

3 comments:

Ayyanar Viswanath said...

வாங்க! வாங்க!! இது போல ஒரு பக்கம் அவசியம் தேவை
நிறைய எழுதுங்க :)

நாமக்கல் சிபி said...

இன்றுதான் பார்த்தேன்!

//இது போல ஒரு பக்கம் அவசியம் தேவை
//

நிச்சயமாத் தேவை!

தொடர்ந்து எழுதுங்க!

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

சிவக்குமார்.சீ said...

நன்றி! நன்றி! உங்கள் ஊக்கம் என்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட எல்லவல்ல இறையை நோக்கி தியானித்து வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்.