Sunday, October 7, 2007
ஞானம் ஏன் வந்ததது?
வெறுமையின் வெளிப்பாடு
ஞானத்தின் ஏற்பாடு
குருவின் வருகை
தியானத்தின் பிரவேசம்
எண்ணத்தின் கழிவு
மொழியின் நிசப்தம்
மௌனத்தின் தெளிவு
புரிதலின் பரிமாணம்
தெரிதலின் தெளிவு
பொய்மையின் விடுதலை
மெய்மையின் ஈர்ப்பு
அச்சத்தின் உச்சம்
மரணத்தை எதிர்கொள்ளல்
யோகத்தின் கூடல்
மாயையை உணர்தல்
அகந்தையின் அழிவு
கன்மத்தின் களைவு
மும்மலம் மறைவு
முழுமையின் நோக்கம்
பிரம்மத்தில் இணைதல்
நிறைவின் பரவசம்
நிம்மதியின் முடிவு
சலனத்தின் தொடர்ச்சி
பிறப்பின் ஆரம்பம்
புலன்களின் சுகிப்பு
துன்பத்தின் எல்லை
அறிவின் தொலைவு
மனதின் ஆழம்
மறைவின் அறியாமை
இருளின் ஆதிக்கம்
சுயத்தின் ஆளுமை
பொருளின் நிறைவு
உறவின் நிலையாமை
துறவின் அடையாளம்
பரத்தின் புரிதல்
இருளின் அழிவு
வாழ்வின் தோல்வி
காலத்தின் நீட்சி
காதலின் ஈர்ப்பு
காமத்தின் கூடல்
கற்பின் நிச்சயம்
ஒழுக்கத்தின் பரிச்சயம்
புணர்தலின் உச்சம்
போகத்தின் நிறைவு
இன்பத்தின் தெரிவு
அமைதியின் நிறைவு
அகத்தின் தெளிவு
ஆன்மாவின் விடியல்
அன்பின் ஆனந்தம்
ஆசையின் நிறைவு
வாழ்வின் நோக்கம்
வேண்டுதல் வேண்டாமை
மரணத்தில் இறவாமை
அறவழி மறவாமை
இமைப்பொழுதும் நினைவு
இறைநிலையில் விலகாமை
சிந்தையிலே தெளிவு
சீர்பெறும் நம் வாழ்வு......
Saturday, October 6, 2007
மரணமிலாப்பெருவாழ்வு

Tuesday, August 21, 2007
ஞானம் எனபது.....

மதியால் வெல்வது ஞானம்
பொய்மையில் வாழ்வது அவலம்
வெறுமையில் திளைப்பது யோகம்
வெளியில் உணர்வது சூன்யம்
உண்மையில் உறைவது ஞானம்
தெளிவினில் திகழ்வது மௌனம்
பொறுமையில் பெறுவது விவேகம்
நன்மையில் நடப்பது பெருமிதம்
தீமையில் தொடர்வது துன்பம்
கடமையை செய்வது கர்மம்
கண்ணில் உள்ளது கரணம்
கற்பில் சரிவது சலனம்
கருத்தில் நிற்பது கவனம்
வினையை களைவது யோகம்
ஊழில் வீழ்வது ரோகம்
பெண்ணில் இணைவது மோகம்
பெண்ணுள் உறைவது காமம்
வெற்றியில் களிப்பது கர்வம்
மதியில் பிறழ்வது சபலம்
உயிரை உணர்வது யோகம்
உணர்வில் வாழ்வது ஞானம்
வாழ்வில் தோற்பது மரணம்
கதியில் சேர்வது சமனம்
முதுமையில் அழிவது தேகம்
கடைசியில் வெல்வது காலம்
காலத்தில் உள்ளது ஞாலம்
கருத்தில் கொள்வது ஞானம்
Friday, August 17, 2007
மதியும்-திதியும்

Friday, June 15, 2007
Tuesday, June 12, 2007
யோகமும் அதன் மருத்துவ விளக்கமும்-ஓர் விஞ்ஞான பார்வை

அவர்களுடைய உடற்செல்களின் வளர்சிதை( Metobolism) மாற்றம் சமச்சீரானது, இயல்பானது ஒழுங்கானது, அதில் ஏற்றத்தாழ்வுகள் என்ற மிகுதல், குறைதல் இன்றி ஒத்த, பொருந்திய நிலையில் வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன.
இங்கு உயிர் என்றால் அது விஞ்ஞானத்தில் இல்லாத ஒன்று என்று இன்றைய நிலையில் உள்ள அறிவியல் தெளிகிறது, இருந்த போதிலும் சிலர் அதை செல்லின் ஊடே உள்ள (ectoplasm) எக்டோபிளாசம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.
எது எப்படியாயினும் உண்மை உண்மையாகவே இருக்கட்டும், காலம் கனியும் போது அவர்களின் அறிவுக்கு விடை கிடைக்கும்.
"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று."- வள்ளுவர்.
இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞானியின் வேத வாக்கு.
ஆனால் இதை கற்போரின் அறிவுநிலைக்கு கிட்டுவதில்லை.
1.வாதம்(neurological imbalances)
2.பித்தம் (gastroentrological imbalances)
3.சிலேத்துமம்(Hormonal imbalances)
என்ற மூன்று அளவீடுகளுக்குள் சுருங்கச்சொன்னார்கள்.
ஆகவே நோய் என்பது சமச்சீரற்ற வளர்ச்சிதை (Metabolic disturbances)
மாற்றாத்தால் தோன்றுகிறது.
இந்த இயக்கம் அல்லது உந்துதலில் ஏற்படும் குறைகள், நோய்களை
சரி செய்யவே (மறு+உந்து= மருந்து) மருந்து கொடுத்து சமன் செய்யப்படுகிறது.
நோய் வந்தபின் மருந்து உட்கொண்டு சீர்செய்வதை விட , அன்றன்று
உடலில் ஏற்படும் உடற்செயல் மாற்றங்களை யோகப்பயிற்சியினால்
நெறிபடுத்துவதே யோகியின் நீள் ஆயுள், இறவாமை, மகிழ்ச்சியின் ரகசியங்கள்.
உடற்பயிற்சினால் உடலில் ஆரோக்கியமும், மனப்பயிற்சியால் மனதில் ஒரு தெளிவும் பெற்று என்றுமே ஒரு புத்துணர்வுடன் வாழ்க்கை ஒரு ஆத்மீக விளக்கமாக சுடர்விடும்.
இதற்கெல்லாம் உதாரண புருசர் எனது ஆசான் ஸ்ரீ வேதாத்திரி மகரிஷியே ஆவார், 95 ஆண்டுகள் நீண்டஆயுள் பெற்று வாழ்ந்து காட்டி, நிறைவுடன் சமாதி எய்தி, அவர் வாழ்ந்து காட்டிய வழியே இன்று எங்களுக்கு பாடமாக அமைந்து விட்டது.
எனவே சுவரை வைத்தே சித்திரம் வரைய முடியும்.
வாரீர்! வாரீர்! வாழ்க வளமுடன்.
http://www.vethathiri.org/
Monday, June 11, 2007
யோகமும் நவீன மருத்துவம்-ஓர் விளக்கம்

யோகம் செய்து உடலையும், மனதையும் நெறிபடுத்துவன் யோகி அல்லது சித்தன் எனப்படுவான்.
வாழ்க்கையை வாழக்கற்று கொடுக்கும் யோகிகளுக்கு நாம் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளோம்.
Thursday, May 24, 2007
நான் காணும் ஞான பாரதி....
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் திண்ணத் தகாதென்று

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!
மிடிமையும் அச்சமும் மேவிய என்னெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!
தன்செயல் எண்ணி தவிப்பது தீது இங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!
துன்பமினியில்லை சோர்வில்லை தோற்ப்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!
நல்லது தீயது நாமறிவோமே அன்னை
நல்லது நாட்டுக தீமை ஓட்டுக !
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!
---------------------------------------------------------
மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லெயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்.
நானும் நீயும்....மெய்புலம்பல்

Sunday, May 20, 2007
ஓசோவின் முத்துக்கள்-ஞானம் தேடுவோருக்கு வித்துக்கள்

சிரித்துக்கொண்டே அதை ஏற்றுக்கொள்.
சோதிக்கத் தகுதியுள்ளவனாக உன்னை அவர்
தேர்ந்தெடுத்தது மிகவும் இனிமையானது." - ஓசோ
நீ யாரையோ பின்பற்றுகிறாய் என்று அர்த்தம்."- ஓசோ
மிகுந்தவர்கள் வாழமுடிவதில்லை! வாழ்வு குழந்தைத்தனம்
கொண்டோர்க்கே உரியதாக இருக்கிறது." - ஓசோ
ஆக்கிரமிக்கப்படுவீர்கள். அதை இழந்து விடுவோமோ
என்று பயப்படத் தொடங்குவீர்கள்." - ஓசோ
இந்த சமுதாயத்திற்கு மிகவும் பொருந்திப் போகிறான். அவனை மதிப்பிட
மதிப்பீடுகளையும், குணங்களையும் சமுகம் வைத்திருக்கிறது.ஆனால்
ஓரு அறிவுஜீவியை மதிப்பிட சமூக்கத்திற்கு பல வருடங்களாகும்." - ஓசோ
Saturday, May 19, 2007
யோகம் என்பது-எனது பார்வையில்...

நம்மில் பெரும்பாலோர் யோகம் அல்லது யோகா என்பதை உடற்பயிற்சி முறை என்று தவறான எண்ணம் கொண்டுள்ளோம் .
உண்மையில் யோகாசனம் என்பதே நீங்கள் காணும் ஆசனா அல்லது உடற்பயிற்சி முறையாகும். இவைகள் யோகத்தின் முதல்படியாகும், உடலை நெறிபடுத்தி ,நோயின்றி நீண்ட ஆயுள் பெற்று வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும்.
யோகம் என்ற வடமொழி சொல்லுக்கு-" இணைந்திருத்தல் அல்லது சேர்ந்திருத்த்ல்" என்று பொருள் படும், நமது செந்தமிழில் "தவம்" என்பதே சரியானதாகும்.
நாம் செய்யும் எந்த செயலிலும் ஒற்றை மனதுடன் வேறுபாடின்றி லயித்து செய்வதே யோகம் அல்லது தவமாகும்.
"தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு"
என சுருங்கச்சொல்லுகிறது தமிழ்மறை வள்ளுவம்.
தவம் செய்து வருவதால் மனமானது விழிப்படைந்து எதைச்செய்யினும் சரிவர செய்யும், மனதின் உற்றுநோக்கும் திறன் கூடி , ஞாபக சக்தியும் அதிகரிப்பது கண்டறிந்த உண்மையகும்.
யோகம் என்பது மனதை உயிரின் மேல் வைத்து கவனிப்பது அல்லது தியானிப்பது என்பது எளிமை பொருளாகும்.
ஒவ்வொரு மனிதருக்கும் தன்னுடைய வித்து அல்லது மூலாதாரம் அமைந்துள்ள குதத்தின் மேல் பகுதியில் குண்டலினி மகாசக்தி இயக்கதில் உள்ளது. இது அறிவின் தரத்திற்கு ஏற்ப மேலெழுச்சி பெற்று ஒளிரும்.
அட்டாங்க யோகமும் இதையே தெளிவு பட விளக்குகிறது.
மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை ஒவ்வொரு நிலையாக எட்டாவது நிலையான தலையின் உச்சியான பிரம்மரந்திரம் அல்லது
துரியத்தில் மேல் நோக்கி செலுத்துவதாகும். இதையே எட்டு சக்கரங்களாகவும் கொள்ளுவர்.
யோகத்தில் பல முறைகள் உள்ளது. இதை தகுந்த குருவின் துணையோடே கற்றுக்கொள்ள வேண்டும்.
எளியமுறை குண்டலினி யோகத்தை நீங்கள் ஐயமின்றி சுவாமி வேதாத்திரி அவர்களின் முறைப்படி உங்கள் அருகாமையிலுள்ள
மனவளக்கலை மன்றத்தில் பொருட்செலவும்,காலச்செலவின்றி
கற்று பயன் பெறலாம். இணைய முகவரி www.vethathiri.org ல் சென்று மேலும் தகவல்கள் பெறலாம்.
மேலும் வளரும்...
Thursday, May 17, 2007
மெய்யன்பர்களே-விழித்துக்கொள்ளுங்கள்!

இன்பத்தில் பூரிக்கும் இந்த மனம்,
ஏன் துன்பத்தில் சிக்கித்தவிக்கும் போது நொந்து போகிறது, சிந்தியுங்கள்!
உடல்-உயிர்-மனம், என்றுமே இசைவாக வைக்க கற்றுக்கொள்ளுவோம், வாருங்கள் வரவேற்கிறோம் .
www.vethathiri.org வாழ்க வளமுடன்!
<$BlogItemCommentCount$> மறுமொழிகள்:
At <$BlogCommentDateTime$>, <$BlogCommentAuthor$> said…
<$BlogCommentBody$>
<$BlogCommentDeleteIcon$><$BlogItemCreate$>
இந்த இடுகைக்கு தொடுப்புகள்:
எழுதியவர்<$BlogBacklinkAuthor$> @ <$BlogBacklinkDateTime$>
<$BlogItemBacklinkCreate$>
<< முகப்பு